Sunday, November 13, 2011



மனிதன் ஒரு சமூகப்பிராணி. ஒரு குழந்தை பிறக்கும் போது சமூகப் பண்புகளுடன் பிறப்பதில்லை. மற்றவர்களோடு தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலமே நற்பண்புகளை பெற்றுக்கொள்கின்றது. குழந்தையின் படிப்படியான வளர்ச்சியில் நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டுமாயின் சுமூகமான தொடர்பாடல் அவசியமாகும். சமூகத் தொடர்பாடல் முதிர்ச்சி ஏற்படும் போது தனிநலன்களில் மாற்றம், புதிய நண்பர்களைத் தேடுதல், புதிய சூழ்நிலைகளில் மற்றவர் குணங்களைப் புரிந்து கொள்ளுதல், சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகிய திறன்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. தொடர்புகள் பல வகையில் ஏற்படுத்தப்படலாம்.

1. பெற்றோர் - பிள்ளைகள் தொடர்பு
2. ஆசிரியர் - மாணவர் தொடர்பு
3. சகபாடிகள் தொடர்பு
4. பெரியவர்கள் தொடர்பு
5. கற்றவர்கள் தொடர்பு.

இவர்களுடான தொடர்புகள் சமூக விருத்திக்கும் தனியாள் ஆளுமை விருத்திக்கும் அவசியமானதாகும.;

முதலில் தொடர்புகள் ஏற்படுததப்படும் இடம் குடும்பம் ஆகும். குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள் தொடர்பு சீரானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமைதல் அவசியம். பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் அத்தகைய தொடர்புகள் ஏற்படாது விட்டால் பிள்ளைகளுக்கு மனமுறிவு ஏற்பட ஏதுவாகின்றது. பிள்ளைகள் பற்றிய அக்கறை ஒவ்வொரு பெற்றோரிடமும் இருத்தல் அவசியம். பிள்ளைகள் முதலில் பெற்றோரிடத்தில் அன்பை எதிர்பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து நல்ல கண்காணிப்பும் அன்பும் பிள்ளைகளுக்கு கிடைக்குமாயின் அவர்களுக்கிடையிலான உறவு ஆரோக்கியமானதாக அமையும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் போது ஆலோசனைகளை வழிகாட்டல்களை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பாராட்டுக்கள் கவனிப்புக்கள் வழங்கும் போது பெற்றோர் பிள்ளைகள் தொடர்பு அதிகரிக்கின்றது.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது”. சிறுவயதில் நற்பண்புகளைப் பழகாது விட்டால் வளர்ந்தும் கூட அவற்றைப் பெற முடியாது. ஆதலால் பிள்ளைகள் சிறுவயதிலேயே கல்வி ஒழுக்கம், சமூக விழுமியங்களை கடைப்பிடிப்பதில் ஆரடவமும் அக்கறையும் கொள்ள வேண்டுமாயின் பெற்றோர் பிள்ளைகள் தொடர்பு சீரானதாக அமைதல் அவசியம்.

இவர்களுக்கிடையே இத்தகைய சீரான தொடர்புகள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் :
  • தாய் தந்தையரிடையே புரிந்துணர்வு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அன்பு, சகிப்பு தன்மை காணப்படும் போது
  • பெற்றார் சமூகத்தில் நேர்மனப்பாங்குடன் வாழும் போது. 
  • பெற்றார் பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களாக இருந்து ஆலோசனைகள் வழங்கும் போது. 
  •  பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இனங்கண்டு தீர்க்கும் போது. 
  • பிள்ளைகளின் கல்வி, கணிப்பு, அன்பு, பாதுகாப்பு, போன்ற பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் போது, பெற்றோர்மட்டில் பெற்றோர்மட்டில் பிள்ளைகளுக்கு மதிப்பு ஏற்படுவதுடன் அவர்களுக்கிடையிலான தொடர்புகளும் நல்லமுறையில் அமையும். 

ஆசிரியர் - மாணவர் தொடர்பானது மாணவனிடம் தலைமைத்துவப்பண்பு ஆளுமை விருத்தி, நல்லொழுக்கம், கற்றல் மேம்பாடு ஆகியவற்றை வளர்ப்பதற்கு ஏதுவாகின்றது. ஆசிரியர் மாணவ சமுதாயத்தின் வழிகாட்டிகள். சமூக விழுமியங்களைப் பேணல், நல்லொழுக்கம், கற்றல், தொழில் போன்ற பல்வேறு விடையங்களுக்கு மாணவன் வழிகாட்டப்படுதல் வேண்டும். ஆசிரியரின் வழிகாட்டுதல்களை மாணவன் ஏற்று, அதன்படி செயற்படுவதற்கு ஆசிரியர் - மாணவர் தொடர்பு சிறப்பானதாக அமைய வேண்டும். குருகுலக் கல்விமுறையில் இத்தொடர்பு நல்ல முறையில் பேணப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாணவனையும் ஆசிரியர் இனங்கண்டு அவனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார். அத்தகைய உறவு முறை இன்றும் தொடர வேண்டும்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் இவர்களுக்கிடையிலான உறவு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. 
  • மாணவர் பிரச்சனைகளை ஆசிரியர் இனங்கண்டு பரிகாரம் தேடும் போது.
  • மாணவர்களின் திறமைகளை ஆசிரியர் இனம்கண்டு வளர்க்கும்போது. 
  • மாணவர்களுக்கு பாராட்டு, கணிப்பு வழங்கும் போது. 
  • ஆசிரியர் மாணவனுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் போது. 
  • மாணவன் பிழைவிடும் போது அவனைத்திருத்தி நல்வழிப்படுத்தும் போது 
  • ஆசிரியர் முகமலர்ச்சி, ஒழுக்கம், நற்பண்புகளுடன் செயற்படும்போது .
  • ஆசிரியரை மாணவன் மதிக்கும் போது ஆசிரியர் - மாணவன் இடைத்தொடர்பு நன்றாக அமையும். 

அடுத்து சகபாடிகளின் தொடர்பு தனியாளின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விடகின்றது. நண்பர்களைத் தெரிவுசெய்யும் போது நல்லொழுக்கம் உடையவராகவும், நல்ல வழிகாட்டக் கூடியவராகவும் தெரிவு செய்வது இன்றியமையாதது. நீண்டகால நற்செயல்களின் பின்னணியிலே சமூகத்தில் நற்பெயரைப் பெறமுடியும். ஆனால் கெட்டபெயர் கெட்டபெயர் ஒரு நொடிப் பொழுதில் கிடைத்துவிடும். பல ஆண்டுகாலமாக பேணிக் காத்த நற்பெயரை, நல்லொழுக்கத்தை கெட்ட சகவாசத்தால் நொடிப் பொழுதில் இழந்து விடலாமா? “ஆழமறிந்து காலை விடு” என்பது பழமொழி. அநுபவத்தின் வெளிப்பாடு. ஆகையால் நண்பர்களை ஆராயாமல் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது தவறு.

பெரியவர்கள் வாழ்வில் பழுத்த அநுபவசாலிகள். வாழ்க்கையின் மேடுபள்ளங்கள், நெளிவு சுழிவுகள் யாவும் நன்கறிந்தவர்கள். அவர்களுடன் கொள்ளம் தொடர்பானது சமுதாயத்தின் ஏற்றத்திற்கும், சுபீட்ச வாழ்வுக்கும் வழிகாட்டும். பெரியவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்கு வழிவகுக்கும்.

“கற்றவர்கள் முகத்திரண்டு கண்ணுடையார்” அவர்களின் தொடர்பானது வாழ்க்கையறின் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்கின்றது. “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” என்பார்கள். கற்றவர்களோடு சேர்வதால் கல்வியறிவு, நல்லொழுக்கம் இயல்பாகவே பற்றிக் கொள்ளும் என்பது கற்றோர் கருத்தாகும்.

ஆதலால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பட்டோரும் வாழ்க்கைக்கு வேண்டிய நல்லனவற்றைப் பெற்று வாழவேண்டும். அதற்கு இடைத்தொடர்புகள் அவசியமாகின்றன. 

0 comments:

Post a Comment

Unordered List

Sample Text

Powered by Blogger.

Welcome to ar_talks

Welcome to ar_talks
Welcome

My pics

My pics

Social Icons

Pages

Followers

Featured Posts

Social Icons

Popular Posts

Recent Posts

Text Widget